அரியலூர், ஆக.21-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட மக்கள் கோரிக்கை மாநாடு அரியலூர் அண்ணா சிலை அருகில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் இளங் கோவன் தலைமை வகித்தார்.
ஒன்றியச் செயலாளர் அருண் பாண்டியன் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணி வேல், ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்ற னர். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
மருத்துவக் கல்லூரிக்கு நவீன வசதிகள்
ஒன்றிய அரசு ஆய்வு செய்து கும்பகோணம் - ஜெயங்கொண்டம் - அரியலூர் - நாமக்கல் - சேலம் வரை புதிய ரயில் பாதை திட்டத்தை அமல் படுத்த வேண்டும். அரசு சிமெண்ட் ஆலை சுரங்கங்களில் இருந்து சுண் ணாம்புகள் ஏற்றி வரும் கனரக லாரி களுக்கு தனி சாலை அமைத்து, விபத்தை தடுக்க வேண்டும். அரிய லூரில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை திறந்தும், இதுவரை உள்நோயாளிகள்-புற நோயாளிகளை பாதுகாக்க போது மான உயிர் காக்கும் நவீன வசதிகளு டன் கூடிய மருத்துவ சேவை துவங்கப் படவில்லை.
மாவட்டத் தலைநகர் அரிய லூர், ஜெயங்கொண்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்க வேண்டும். அரியலூர் நகரில் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் அமைத் திட வேண்டும். ஜெயங்கொண்டம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப் பட்ட 1376 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொன்னேரியை ஆழப்படுத்தி படகு சவாரியுடன்கூடிய சுற்றுலாத் தலம் அமைக்க வேண்டும்.
ஜெயங்கொண்டம் ஆண்டிமடத் தில் நிலக்கரி திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நில பட்டாவை திருப்பி வழங்கி, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை காலத் தோடு அமல்படுத்த வேண்டும். தா. பழூரில் விவசாய உற்பத்தி அதிக மாக இருப்பதால் அரசு நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும். மாவட் டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் மேம் படுத்த வேண்டும்.
கொள்ளிடத்தில் தடுப்பணை
திருமானூர் ஒன்றிய விவசாயி களின் நீண்ட கால கோரிக்கையான கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் 2022 மே, செப்டம்பர் மாதங்களில் இலவச வீட்டுமனை பட்டா, கொடுமனை பட்டா கேட்டு மனு கொடுத்த ஏழை-எளிய மக்க ளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் திண்டிவனம் - தஞ்சை செல்லும் பைபாஸ் சாலையில் சுண்டிபள்ளம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள காது கேளாதார் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சாலை பணி நடை பெற்று வருகிறது.
முந்திரி கடைக்கு ரூ.15 ஆயிரம்
மாவட்டத்திலுள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களை பாதுகாத்திட தா. பழூர், திருமானூர் ஒன்றியங்களில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைத்திட வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு 22 ரகத்தை அமல் படுத்த வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நலவாரிய பயன்களை இரட்டிப்பாக்கி பயன் களை வழங்கிட வேண்டும். ஆண்டி மடம், செந்துறையில் அரசு முந்திரி தொழிற்சாலைகள் ஏற்படுத்த முந்திரிக் கொட்டை மூட்டை ஒன்றுக்கு ரூ.15, 000 விலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து இம்மாநாடு நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற நிதியளிப்பு பொதுக்கூட்ட மாநாட்டில் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலை மையிலான உறுப்பினர்கள் உண்டி யல் வசூல் செய்த ரூ.8 லட்சத்து 25 ஆயிரத்து 520 ஐ அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ண னிடம் வழங்கினர்.