districts

img

சிபிஎம் 7-ஆவது நாள் நடைபயணம்: திருமெய்ஞானம் தியாகிகளுக்கு அஞ்சலி

மயிலாடுதுறை, டிச.23-  மயிலாடுதுறை மாவட்டம் முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்று வரும்  நடைபயணம் 6-ஆவது நாளான  வியாழனன்று மாலை திருக்கடை யூர் வந்தடைந்தது.  இப்பயணத்தில் அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில  இந்திய துணைச்செயலாளர் செயலாளர் பி.சுகந்தி, வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் ஆகியோர் கலந்துகொண்ட னர். வாணவேடிக்கைகள், பாரம் பரிய இசைகளுடன், நடைபயண குழுவிற்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதனைத்தொடந்து திருக்கடை யூர் சன்னதி வீதியில் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்தி ரன் தலைமையில் நடைபெற்ற தெரு முனைக் கூட்டத்தில் மாதர் சங்க அகில இந்திய துணைச்செயலாளர் பி.சுகந்தி, சிபிஎம் மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், வாலிபர் சங்க  மாநிலச் செயலாளர் சிங்காரவேலன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரை ராஜ், டி.சிம்சன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். திருக்கடையூர் கிளை செயலாளர் இளையராஜா நன்றி கூறி னார்.  7-ஆவது நாளான வெள்ளியன்று காலை திருமெய்ஞானம் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி  புறப்பட்ட நடைபயணம் திரு மெய்ஞானம், டி.மணல்மேடு, வளையசோழகன், திருவிடைக்கழி, தில்லையாடி, காட்டுச்சேரி, ஆயப் பாடி, திருக்களாச்சேரி, எடுத்துக் கட்டி, சாத்தனூர், பூதனூர் வழி யாக இலுப்பூர், சங்கரன்பந்தல் வந்த டைந்தது.  முன்னதாக திருவிடைக்கழி கிரா மத்தில் கிளைச் செயலாளர் ஜோதி பாசு தலைமையில் கிளார்நெட் இசைத்து, பட்டாசுகள் வெடித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்ப ளிக்கப்பட்டது. பின்னர் தில்லை யாடி வள்ளியம்மை சிலைக்கு பயணக் குழு தலைவர் பி.சீனிவாசன் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தி னார். நடைபயணத்தை வாழ்த்தி வள்ளியம்மை நினைவிட காப்பாளர் ஹைதர் அலி, குழுவினர்களுக்கு மாலை அணிவித்து கோரிக்கைகள் வெற்றிபெற வாழ்த்தினார்.