districts

img

திருப்பனந்தாள் நூறு நாள் வேலையில் சாதிய பாகுபாடு கூடாது: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்,  ஜன.12 - தஞ்சை மாவட்டம் திருப்ப னந்தாள் ஒன்றியத்தில் மேல  சூரியமூலை, வீராக்கண்ணு உள்ளிட்ட பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் நூறு நாள் வேலையில், சாதிய பாகுபாட்டுடன் ஈடு பட்டு பட்டியல் இனத்தவர்க ளுக்கு மட்டும் சம்பளம் வழங் காமல் இருப்பதை சுட்டிக் காட்டி கடந்த திங்களன்று தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது.  இது சம்பந்தமாக திருப் பனந்தாள் ஊராட்சி ஒன்றி யத்தில் நூறு நாள் வேலை வழங்குவதிலும், சம்பளம் வழங்குவதிலும் நிகழும் சாதிய பாகுபாட்டை கண்டி த்து திருப்பனந்தாள் ஒன்றிய  அலுவலகம் முன்பு விவசா யத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.எஸ். பாரதி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க  மாவட்ட செயலாளர் பக்கிரி சாமி, மாநில செயலாளர் நாக ராஜன், சிபிஎம் மாவட்ட குழு  உறுப்பினர் ஜீவபாரதி, திருப் பனந்தாள் ஒன்றிய செயலா ளர் டி.ஜி.ராஜேந்திரன், சாமிக்கண்ணு, நடேசன், வெற்றிச்செல்வி உள்ளிட்ட விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பிறகு திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மேற்கண்ட கோரி க்கைகளை நிறைவேற்றுவ தாக உறுதியளித்தார். இத னால் தொடர் போராட்டம் தற் காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.