மன்னார்குடி, ஏப்.16 - தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் ச.முரசொலியை ஆத ரித்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் மற்றும் வாக்குச் சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. கட்சியின் நகரக் குழு சார்பாக நடை பெற்ற இயக்கத்திற்கு நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ் மணி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு. பிரகாஷ் மற்றும் நகரக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். பாமனியில் துவங்கிய பிரச்சாரம், வாஞ்சியூர் கீழபாலம் நகராட்சி உட்பட பத்து இடங்களிலும், அதைச் சுற்றியுள்ள உள்பகுதிகளிலும் நடைபெற்றது. பெரியார் சிலை எதிரில் நடைபெற்ற இறுதிகட்ட வாக்குச் சேகரிப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி உரையாற்றினார். சிஐடியு வாக்குகள் சேகரிப்பு மன்னார்குடி நகரம் முழுவதும் சிஐடியு சார்பில் நடந்த வாக்குச் சேகரிப்பில், சிஐ டியு திருவாரூர் மாவட்டத் தலைவர் எம்.கே.என்.ஹனிபா, மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்டப் பொருளாளர் இரா. மாலதி, துணைத் தலைவர் ஜி.ரகுபதி மற்றும் ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகிகள் பங்கேற் றனர்.