தஞ்சாவூர், ஜூலை 13-
தஞ்சாவூர் ஒன்றியம், மணக் கரம்பை ஊராட்சி எம்ஜிஆர் நகர் பகு தியில், பல ஆண்டுகளாக குடி யிருந்து வரும் மக்களுக்கு பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என தஞ்சாவூர் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியரிடம் வீட்டுமனைப் பட்டா கேட்டு, பலமுறை மனு அளித்தும் நட வடிக்கையும் எடுக்காததைக் கண் டித்தும், உரிய தீர்வு காண வலி யுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சாவூர் ஆதி திராவிடர் நல வட்டாட்சியர் அலுவல கம் முன்பு வியாழக்கிழமை காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மாநகர்க்குழு உறுப்பினர் சி. ராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பி.புனிதா, எம்.மகேஸ்வரி, எஸ்.உத்ரா மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ந.குருசாமி, என்.சரவணன், மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், எம்.ராஜன், கரிகாலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ரகு நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது ‘குடிமனைப் பட்டா தொடர்பாக ஆவணங்களை பரி சீலனை செய்து வகை மாற்றம் செய்ய வும், மனைப்பட்டா கேட்டு விண்ணப் பித்தவர்களுக்கு அரசு விதிமுறை களின் படி மனைப்பட்டா வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையேற்று காத்தி ருப்பு போராட்டம் விலக்கிக் கொள் ளப்பட்டது.