districts

img

திருக்கடையூரில் மாடு, குதிரை ரேக்ளா பந்தயம்

மயிலாடுதுறை, ஜன.17 - காணும் பொங்கலையொட்டி மயி லாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மாடு, குதிரை ரேக்ளா பந்தயம் புதனன்று  நடைபெற்றது.  திருக்கடையூரில் தில்லையாடி உத்தி ராபதியார் 44 ஆம் ஆண்டு, நாராயண சாமி 11 ஆம் ஆண்டு நினைவாக மாடு, குதிரை ரேக்ளா பந்தயம் புதனன்று காலை தொடங்கி மாலை வரை நடை பெற்றது. விழாவிற்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவ ராஜ் தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் சிம்சன் வர வேற்று பேசினார். பூம்புகார் எம்.எல்.ஏ  நிவேதா முருகன் ரேக்ளா பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டி, திருக்கடையூரில் உள்ள தில் லையாடி நுழைவு வாயில் அருகிலிருந்து அனந்தமங்கலம் மற்றும் தரங்கம்பாடி வரை நடந்தது.  மாட்டிற்கான ரேக்ளா பந்தய எல்லை  சுமார் 6 கி.மீ தூரம் உள்ள அனந்த மங்கலம் வரையும், குதிரைக்கான ரேக்ளா  பந்தய எல்லை சுமார் 8 கி.மீ தூரம் உள்ள  தரங்கம்பாடி வரையும் சென்று திருக்கடை யூர் திரும்பும்படி நிர்ணயிக்கப்பட்டது. இதில் சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை ஆகிய மாடுகள் மற்றும் குதிரைகள் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவை தலா ஆறு வகைகளாக பிரிக்கப் பட்டு போட்டிகள் நடைபெற்றன.  போட்டியில் சின்னமாட்டிற்கு ரூ.8 ஆயிரம், நடுமாட்டிற்கு ரூ.10 ஆயிரம், பெரிய மாட்டிற்கு ரூ.12 ஆயிரம், கரிச் சான் குதிரைக்கு ரூ.15 ஆயிரம், நடுக்குதி ரைக்கு ரூ.18 ஆயிரம், பெரிய குதிரைக்கு  ரூ. 20 ஆயிரம் ஆகிய பரிசுகள் மற்றும்  கேடயத்தை மாடு, குதிரை உரிமையா ளர்களுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா முருகன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை திருக்கடை யூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள் நல்லூர், கிள்ளியூர், தில்லையாடி, காழியப் பநல்லூர், மாணிக்கபங்கு ஆகிய ஏழு  ஊராட்சி தலைவர்கள் மற்றும் தரங்கம் பாடி பேரூராட்சி தலைவர், பொதுமக்கள் செய்திருந்தனர். உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் இப்போட்டியை கண்டு ரசித்தனர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்தி ரன் நன்றி கூறினார். டி.எஸ்.பி. லாமேக்  தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.