districts

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தம்பதி கைது

அரியலூர், செப்.15 - அரியலூர் மாவட்டம், உடையார்பாளை யம் அருகே அரசு வேலைவாங்கித் தருவ தாகக் கூறி ரூ.36.20 லட்சம் பணம் மோசடி செய்து, போலி ஆணை வழங்கிய தம்பதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோயில் அருகேயுள்ள கண்டமங்க லம், குமிளங்காட்டு தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (43). இவரது வீட்டுக்குச் சென்ற  உறவினரான அரியலூர் மாவட்டம் உடை யார்பாளையத்தை அடுத்த விழபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (42), இவரது மனைவி மதியழகி (35) ஆகியோர் பணம் கொடுத்தால் தங்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் வங்கிப் பரிவர்த்தனை மூலம் ரூ.4,90,000-மும், ரொக்கமாக ரூ.4 லட்சமும் பெற்றுள்ளனர். மேலும், ஊரில் யாராவது படித்து விட்டு  வேலை இல்லாமல் இருந்தால் அழைத்து வாருங்கள், அவர்களுக்கும் வேலை வாங்கித் தருகிறோம் என அந்த தம்பதி  கூறியுள்ளனர். இதனை நம்பிய பிரபாகரன், தமது ஊரைச் சேர்ந்த பிரேம்குமார், முருகன், ரகு பதி, சண்முகசுந்தரம், கவிமணி, கதிரவன் மற்றும் இருகையூரைச் சேர்ந்த குருதேவன் ஆகியோரை பிரகாஷூக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர்களிடம் சிமெண்ட் நிறுவனம், சேலம் ஆவின் நிறுவனம், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அஞ்சல் துறை  உள்ளிட்ட இடங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.27,10,000-ஐ பெற்றுக் கொண் டார். இதையடுத்து பிரகாஷ், பிரபாகரனுக் கும், கவிமணிக்கும் அஞ்சல் துறைப் பணிக் கான நியமன ஆணையை வழங்கியுள்ளார். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள், அஞ்சல் துறையில் விசாரித்த போது, பணி  நியமன ஆணை போலியானது என தெரிய வந்தது. இது தொடர்பாக பிரபாகரன், பிர காஷிடம் கேட்ட போது, ‘இது பற்றி வெளி யில் ஏதாவது புகார் கொடுத்தால் உங்களை  கொலை செய்து விடுவேன்’ என மிரட்டி யுள்ளார். இதையடுத்து பிரபாகரன் கடந்த 29.9.2022 அன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் அளித்த புகாரின் பேரில், மாவட்ட  குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து, பிரகாஷ் மற்றும் அவரது மனைவி மதியழகி ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, அரியலூர் மாவட்ட  குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணமதி,  உதவி ஆய்வாளர்கள் ரவி, முருகன் உள்ளிட்ட காவல்துறையினர், ஜெயங் கொண்டம் அண்ணா சிலை அருகே நின்று கொண்டிருந்த பிரகாஷையும், அரியலூர் ராஜீவ் நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று  கொண்டிருந்த பிரகாஷ் மனைவி மதியழகி யையும் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகள், 60 கிராம் தங்க நகைகள், ரூ.56,070 ரொக்கம், 3 ஏடிஎம் கார்டுகள் மற்றும்  சில போலி நியமன ஆணை கடிதங்களை பறிமுதல் செய்தனர்.