districts

img

அரசு பள்ளிகளுக்கு டெஸ்க், பெஞ்ச் வழங்கிய கவுன்சிலர்

அறந்தாங்கி, ஜூலை 29-

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியிலுள்ள பெரும்பாலான துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி களில் மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வருகின்ற னர். மாணவர்களின் சிரமத்தை போக்கவும், மாணவர்களின் கல்வித்திறனை அதிகப்படுத்தவும் மாவட்ட கவுன்சிலர் நிதியி லிருந்து டெஸ்க், பெஞ்ச் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.  

    முதற்கட்டமாக காரக்கோட்டை ஒன்றிய துவக்கப் பள்ளி, கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, இடையாத்திமங்களம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, பானாவயல் துவக்கப்பள்ளி, மும்பாலை ஊராட்சி  ஒன்றிய துவக்கப்பள்ளி, வடக்கம்மாப்பட்டினம் துவக்கப் பள்ளி மற்றும் புதுக்குடி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளி களுக்கு டெஸ்க், பெஞ்ச் வழங்கப்பட்டது.

    இவற்றை மாவட்ட கவுன்சிலர் நஜிமுதீன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் கள், மாணவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி உறுப் பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.