districts

img

சாலைகளில் தாழ்வாகத் தொங்கும் கேபிள் வயர்களை அப்புறப்படுத்த மாநகராட்சி திட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 21-

    திருச்சிராப்பள்ளி நகருக்குள் பாது காப்பான வாகனப் போக்குவரத்தை உறுதி செய்யும் நடவடிக்கையின் ஒரு  பகுதியாக திருச்சிராப்பள்ளி மாநக ராட்சி, சாலைகள் மற்றும் சாலைத் தடுப்புகளுக்கு (சென்டர் மீடியன்கள்) மேல் தொங்கும் தொலைக்காட்சி கேபிள்கள் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்களை அகற்றும் முயற்சியை தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

   நகரின் அழகைக்  கெடுப்பதில் மேல்நிலை கேபிள்கள் மற்றும் மின்சார  வயர்களும் முக்கியப் பங்கு வகிப்பதாக  குற்றம் சாட்டப்படுகிறது. மின்கம்பங் களும் மின்மாற்றிகளும் பல இடங்க ளில் போக்குவரத்திற்கு மின்கம்பங்களில்  பல்வேறு கேபிள்கள் கட்டப்பட்டிருப்ப தால், பலத்த காற்றுடன் மழை பெய்யும்  போது அவை அறுந்து விழும் அபா யம் உள்ளது.

    திருச்சிராப்பள்ளி சாஸ்திரி சாலை யில் உள்ள ஒவ்வொரு மின்கம்பத்தி லும் குறைந்தது பதினைந்து அங்கீ கரிக்கப்படாத கேபிள்கள் கட்டப்பட்டு உள்ளன. தவிர முக்கிய நகர் சாலைகளான சாஸ்திரி சாலை, பாரதிதாசன் சாலை, மற்றும் கே.கே. நகர் பிரதான சாலை பகுதிகளில் தாழ்வாகச் செல்லும் கேபிள் களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

  இதற்கு நிரந்தரத் தீர்வுகான, கேபிள் களை சாலையை ஒட்டியுள்ள பகுதி களில்  தரையில் குழாய்களைப்பதித்து அதன் வழியே கேபிள்களை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் தவிர்த்து  தாழ்வாகச் செல் லும் கேபிள்கள், இடையூறாக உள்ள கேபிள்கள் உள்ள சாலைகளைக் கண்ட றியும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

   கரூர் புறவழிச்சாலை, ஈவிஆர் சாலை டபுள்யுபி சாலை, புதூர் பிரதான சாலை உள்ளிட்ட முக்கி யச் சாலைகளில்  ஸ்மார்ட் சிட்டி  திட்டத் தின் கீழ் கேபிள்களை கடத்துவதற்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நகரின் மற்ற பகுதிகளிலும் கேபிள் களை பூமிக்கடியில் பதிப்பதற்கான வழிகளை ஆராயும் என மாநகராட்சி யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

  தற்போது, ஒவ்வொரு முறையும் மாநகராட்சி சாலைகளைத் தோண்டி, பழுதை கண்டறிய, பெரும் செலவு ஏற்படுகிறது. ஆனால் குழாய்கள் மூலம்  கேபிள்களை கொண்டு செல்வது எளி தானது மட்டுமல்ல செலவும் குறைவு என்கின்றனர் அதிகாரிகள்.