districts

img

நைனா முகமது கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

அறந்தாங்கி, ஜன.6-  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, ராஜேந்திரபுரம், நைனா முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோ னா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் முகம்மதுபாருக் தலைமை வகித்தார். தி.போர்ட் சிண்டிகேட் ரோட்டரி தலைவர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். துனை முதல்வர் பேரா.ஈஸ்வரி  வர வேற்றார். சிறப்பு அழைப்பாளராக தெட்சிணாமூர்த்தி கலந்துகொண்டார்.  கல்லூரி மாணவிகள் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை, உயிர் காப்பதில், தீவிர நோய்களைத் தடுப்பதில் உள்ள பங்கை பொதுமக்களிடையே எடுத்துச் சென்று, பொதுமக்களின் உயிர் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோளை ஏற்று. ‘‘கொரோனா தடுப்பூசி தூதுவர்களாக செயல் படுவோம்’’ என்று உறுதி அளித்தனர். பேரா.புவியரசன் நன்றி கூறினார்.