districts

img

மாஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கும்பகோணம், ஏப்.2- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கள்ளப்புலியூரில் அமைந்துள்ள மாஸ் கல்வியியல் கல்லூரியில் பட்ட மளிப்பு விழா நடைபெற்றது. மாஸ் கல்வியி யல் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா வில் 331 மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழாவிற்கு மாஸ் கல்விக் குழுமத்தின் நிறுவனர், தாளாளர் சு.விஜயகுமார் தலைமை வகித்தார். செயலர் மாலினி விஜயகுமார், அறங்காவலர் விக்னேஷ், வி. குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் மா.ஜெயக்குமாரி வர வேற்றார். சிறப்பு விருந்தினராகக் கலந்து  கொண்ட தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர்  என்.பஞ்சநாதம், மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  முதல்வர் சரவணன், மாஸ் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அருள்தாஸ் மற்றும் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்  கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.