புதுக்கோட்டை, நவ.28- விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த வேண்டும், அரசுத் துறை யில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி, செஸ்வரியை குறைத்திட வேண்டும், அத்தி யாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கிட வேண்டும், ஒன்றிய, மாநில பொதுத்துறை நிறு வனங்களில் உள்ள காலிப் பணி யிடங்களில் படித்த இளைஞர் களுக்கு வேலை வழங்கிட வேண் டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி, புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்டத் தலைவர் அ. ரெத்தினம் தலைமை வகித்தார். தொமுச மாவட்டச் செயலர் கி. கணபதி, சிஐடியு மாவட்டச் செயலர் அ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் க. முகமதலிஜின்னா, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலர் ப. ஜீவா னந்தம், மாவட்டத் துணைத் தலை வர் கே.ஆர். தர்மராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் த. செங்கோடன் உள் ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். திருச்சிராப்பள்ளி திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலா ளர்களான சிஐடியு ரெங்கராஜன், எல்.பி.எப். குணசேகரன், ஐ.என்.டி.யூ.சி நமச்சிவாயம், ஐக்கிய விவ சாயிகள் முன்னணி.சம்சுதீன்.மற்றும் சிஐடியு நிர்வாகிகள் சந்தி ரன், மாணிக்கம், தரை கடைகணே சன். ஆட்டோ சார்லஸ் எல்.பி.எப். ரவி, இளங்கோ,ஏ.ஐ.டி.யூ.சி.மு ருகன், எச்.எம்.எஸ். ஆலயமணி, ஐ.என்.டி.யு.சி. சேகராஜ் ஆகி யோர் பங்கேற்றனர்.