districts

ஜெயங்கொண்டத்தில் அரசு விரைவு பேருந்து சேவை துவக்கப்படுமா?

நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் எதிர்பார்ப்பு அரியலூர், செப்.12 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் அன்னை  தெரசா நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்க உறுப்பினர்கள் நுகர்வோர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து பேசினர். ஜெயங்கொண்டம் மின்வாரிய அலுவ லகத்தில் கோட்ட பொறியாளர் அலுவலகம்  இயங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் இன்னும் அலுவலகம் இயக்கப்படவில்லை. அது விரைவில் இயக்கப்பட வேண்டும்.  ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரி  துவங்கி நான்காண்டுகள் முடிந்தும், சொந்த  கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்து கட்டிடம்  கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் அரசு விரைவு பேருந்து சேவையை துவக்கி, திருப்பதி, வேளாங்கண்ணி, திருச்செந்தூர், ராமேஸ் வரம், கன்னியாகுமரி, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட நகரங்களுக்கும் வெளி  மாநிலங்களுக்கும் போக்குவரத்து சேவையை துவங்க அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்ப கோணம் - ஜெயங்கொண்டம் வழியாக விருத் தாச்சலம் ரயில் பாதை அமைத்து, ரயில்கள்  விட தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை யில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் இதர பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஜெயங் கொண்டம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடை வீதியில் பொதுமக்களுக்கு சுகாதார கழிப்பிட  வசதி செய்து தர வேண்டும். நகராட்சி ஏரி களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.