சிவகங்கை, மார்ச் 25- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட் டணி சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஆஷாஅஜித்திடம் வேட்பு மனு தாக் கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.ஆர்.பெரி யகருப்பன், ரகுபதி, மெய்யநாதன், சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கார்த்திக் சிதம்பரத்திற்கு மாற்று வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சஞ்சய் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறு கையில், ‘‘சிவகங்கையில் மீண்டும் போட்டி யிட கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. சிவ கங்கை மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பணியாற்ற வாய்ப்பு மீண்டும் கிடைத்துள் ளது. கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒற்று மையாக செயல்பட்டு வெற்றி பெறுவேன். முதல்வரிடம் வேலுநாச்சியார் பெயரில் மகளிர் காவல்படை பயிற்சி மையம் அமைப்பதற்கு கேட்டுள்ளேன்’’ என்றார்.