புதுக்கோட்டை, ஆக.2 -
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற புதுக் கோட்டை மாவட்ட வீரர், வீராங்கனைகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி களில் கலந்துகொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல்வேறு பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றுள்ளனர்.
பளுதூக்குதல் போட்டிகளில் பள்ளி பிரிவில் இ.விஸ்வநாதன் தங்கப்பதக்க மும், கல்லூரி பிரிவில் பிரியா வெள்ளியும், சண்முகப்பிரியா வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர். தடகளம் கல்லூரி பிரிவில் 1,500 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் லாவண்யா வெள்ளியும், வட்டு எறிதலில் எஸ்.கோகுல் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர். பொதுப் பிரிவு தடகளம் 3,000 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் ஜி.லட்சு மணன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இறகுப்பந்து இரட்டையர் பள்ளிப் பிரி வில் ராகுல் மற்றும் தவுபீக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். சிலம்பம் (பள்ளி பிரிவில்) மான் கொம்பு வீச்சில் டி.கிருஷ்ணன் வெண்கல பதக்க மும், கல்லூரி பிரிவில் இரட்டைக் கம்பு வீச்சில் எஸ்.பிரியதர்ஷினி வெள்ளியும், மான் கொம்பு வீச்சில் எம்.ரங்கசாமி வெண்கலமும், கம்பு வீச்சு மற்றும் அலங்கார வீச்சில் எஸ்.கீர்த்தனா வெண்கல மும், பொதுப்பிரிவில் மான் கொம்பு வீச்சில் ராஜா வெள்ளியும், இரட்டைக் கம்பு வீச்சில் கார்த்திகேயன் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.
முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.75,000, மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்ட 14 வீரர், வீராங்கனைகளையும் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.