மதுரை, மார்ச் 25- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளர் சு.வெங்கடேசன் திங்களன்று வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மா.சௌ.சங்கீதாவிடம் தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு கூட்டணி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். வேட்பு மனு தாக்கல் நிகழ்வில், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் முன்னாள் மேயர் பெ. குழந்தைவேலு, மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.வேலுச்சாமி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர் வட்ட செயலாளர்கள், மண் டல தலைவர்கள், மாமன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், கே.சாமுவேல் ராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜி. சுகுமாறன், கே.ஜி.பாஸ்கரன், எம்.ராமகிருஷ்ணன், எஸ்.நம்புராஜன், பி.சுகந்தி, இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாந கர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், சிபிஐ நிர்வாகி ராஜலெட்சுமி, மதி முக மாவட்டச் செயலாளர் முனிய சாமி, விசிக வடக்கு மாவட்டச் செயலா ளர் தீபம் சுடர் மொழி, மக்கள் நீதி மய்யம் மதுரை மண்டலச் செயலாளர் அழகர், ஆதி தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ஆதவன் மற்றும் ஆதி தமிழர் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் இந்திய தேசிய காங்கி ரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகி கள் பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக பனகல் சாலையில் உள்ள இளங்கோ ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் மதுரை நாடா ளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேச னுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பா ளர் சு.வெங்கடேசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமை கள் பாதுகாப்பு சங்கம், அங்கன்வாடி ஊழியர் மற்றும் பணியாளர் சங்கம், டிஆர்இயு, எல்ஐசி ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்டு பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.