districts

திருச்சி முக்கிய செய்திகள்

எம்எல்ஏ புகழேந்தி மறைவு: ஜவாஹிருல்லா இரங்கல்

பாபநாசம், ஏப்.6 - விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறை விற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவா ஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு  மாவட்டச் செயலாளருமான ந.புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் துயரம் அடைந் தேன்.  கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், கடந்த 10 நாட்களாக விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதர வாக சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் புகழேந்தி  தனது கடைசி மூச்சுவரை களப்பணி ஆற்றியுள்ளது நெகிழ்ச் சியை ஏற்படுத்துகிறது. தொகுதி மக்களிடமும், கட்சி தொண்டர் களிடமும் நற்பெயர் பெற்ற அவரது மறைவு ஈடுசெய்ய இயலாத ஒன்று” என தெரிவித்துள்ளார்.

இணையவழி வேலை: ரூ.7.96 லட்சம் மோசடி

தஞ்சாவூர், ஏப்.6- தஞ்சாவூரில் பெண்ணிடம் இணையவழி வேலை எனக் கூறி  ரூ.7.96 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண்ணின் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் செயலிகள் மூலம்  இணைய வழியில் வேலை என்றும், டாஸ்க்குகளை நிறைவேற்றி னால் பணம் வழங்கப்படும் எனவும் தகவல் வந்தது.  இதை நம்பிய அப்பெண். மர்ம நபர்கள் அனுப்பிய லிங்க் வழி யாக பல்வேறு கட்டங்களில் ரூ. 7,96,800 ரொக்கத்தைச் செலுத்தி னார். ஆனால், மர்ம நபர் கூறியபடி அப்பெண்ணுக்கு பணம்  கிடைக்கவில்லை. இது தொடர்பாக அப்பெண் தொடர்பு கொள்ள  முயன்றும், அழைப்புகளை மர்ம நபர் துண்டித்து விட்டார். இதன்மூலம் மர்ம நபர் தன்னை ஏமாற்றியதை அறிந்த அப்பெண், தஞ்சாவூர் இணையதளக் குற்ற காவல் பிரிவில் புகார் செய்தார்.  அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறை கொடி அணிவகுப்பு

அரியலூர், ஏப்.6- நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் மற்றும் மத்திய தொழில் பாது காப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் தொடங்கியது. மாவட்ட எஸ்.பி., செல்வராஜ் தலைமையில் தொடங்கிய இந்த  ஊர்வலம், முக்கிய வீதிகளில் வலம் வந்து மக்களிடத்தில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தியது. இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினர், மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர், ஏப்.6 - தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி ஜமாலியா பள்ளிவாசலில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு  நிகழ்ச்சி, சமூக சேவை அமைப் பான ‘ழ’ பவுண்டேசன் சார்பில்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை பொறுப்பாளரும், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பி னருமான நா.அசோக்குமார் தலைமை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ. அப்துல் மஜீத், திமுக தெற்கு ஒன்றி யச் செயலாளர் க.அன்பழகன் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இஸ்லா மியர்கள் கலந்து கொண்டனர்.

மளிகைக் கடையின் ஓட்டைப் பிரித்து பணம் கொள்ளை

அரியலூர், ஏப்.6 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர்  கவரப்பாளையம் கடைவீதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.  வெள்ளியன்று வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு  வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள் ளார். இந்நிலையில் சனிக்கிழமை காலை கடையை  திறந்து பார்த்தபோது, கல்லாபெட்டி திறந்து கிடந்த தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கல்லாவில் இருந்த ரூ.13,000 பணம் திருடு போனதும், கடையின் மேற்கூரை ஓட்டை பிரித்து கொள்ளையர்கள் உள்ளே வந்திருப்பதும் தெரிய வந்தது.  இதேபோன்று இவரது கடையின் அருகிலுள்ள விஜயா என்பவரின் மளிகை கடையின் மேற்கூரை ஓட்டைப் பிரித்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கு  கல்லா மற்றும் உண்டியலில் இருந்த ரூ.8 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் சிசிடிவி காட்சிகளை  கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்


மயிலாடுதுறை, ஏப்.6 - மயிலாடுதுறை மாவட் டம் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயி லுக்கு தமிழக மற்றும் வெளி  மாநிலங்களைச் சேர்ந்த ஏரா ளமான பக்தர்கள் வந்து தரி சனம் செய்வது வழக்கம்.  கட்டளை தம்பிரான் சாமிகள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் சிறப்பு  பூஜைகள் செய்து கொடி யேற்றம் நடைபெற்றது.  தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.15  அன்று இரவு பஞ்ச மூர்த்தி கள் பூத வாகனத்தில் எழுந் தருளி வீதி உலா காட்சி நடைபெறுகிறது.  முக்கிய நிகழ்ச்சியான ஏப்.21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 7 மணியளவில் தேர்த்திருவிழா நடைபெறு கிறது.

முதியோர்,  மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிப்பு தொடங்கியது

தஞ்சாவூர், ஏப்.6-  தஞ்சாவூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி யது. தமிழகத்தில் ஏப்.19 அன்று மக்களவைத் தேர்தல்  நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலை யில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தங்கள் ஜனநாயக கடமையை நிறை வேற்றும் வகையில் அவர்களது வீட்டுக்கு நேரடியாக  சென்று தபால் வாக்குகளைப் பெற தேர்தல் ஆணை யம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21,421 பேர் உள்ளனர். அதில் 2,446 பேர் தபால் வாக்குக்கு படிவம் பெற்றுள்ள னர். அதே போல் மாற்றுத்திறனாளிகள் 12,294 பேரில்  5,067 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து அதற்கான படிவங்களை பெற்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தபால்  வாக்குகளை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. அவர்களிடம் வாக்குகளை சேகரிக்க 66 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தஞ்சாவூர் கணபதி  நகர் பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர் வீட்டுக்கு நேரடியாக சென்று தபால் வாக்கை குழு வினர் சேகரித்தனர்.இக்குழுவில் மண்டல அலுவலர், மைக்ரோ அப்சர்வர், போலீசார் ஒருவர், வீடியோ கிராபர், அரசியல் கட்சி முகவர் இடம் பெற்றுள்ளனர். கும்பகோணம் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட திருவிடைமருதூர் மேலவீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருவிடைமருதூர் தேர்தல்  நடத்தும் மண்டல அலுவலர் சோபியா, நுண் பார்வை யாளர் நௌஷாத் அலி, காவலர் கௌசல்யா ஆகி யோர் 85 வயது நிரம்பிய மூத்த குடிமக்களின் வீட்டிற்கு  சென்று தபால் வாக்குகளை பெற்றனர்.

விவசாயி கொலை வழக்கில் நியாயமான நடவடிக்கை தேவை எஸ்.பி.யிடம் முறையீடு

தஞ்சாவூர், ஏப்.6 -  தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவிலில் கடந்த ஏப்.1 அன்று காரில் வந்த மூவரை ஒரு  கும்பல் வழிமறித்து தாக்கியதில், காரில் வந்த ஒரத்தநாட்டை  அடுத்த ஆழிவாய்க்காலைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஜெயக்குமார் மகன்  ஸ்ரீராம் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் காசவள நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், எங்களது உறவினரான பசுபதி கோவிலைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன், முருகேசன் ஆகியோர் முன் விரோதம்  காரணமாக அவ்வப்போது தகராறு செய்தனர். இதுகுறித்து மார்ச் 26 அன்று அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்  அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை.  அதன்பிறகு, செந்தில்குமார் உள்பட 3 பேர், ஏப்.1  அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புகார் அளிக்க வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் உள்ள காவல் துறையினர் அறிவுரை யின்படி மீண்டும் அய்யம்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பசுபதிகோவிலில் அழ கேசன், முருகேசன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் அவர் களை வழிமறித்து காரை உடைத்து, பயங்கர ஆயுதங் களால் தாக்கியதில் ஜெயக்குமார் உயிரிழந்தார். மேலும் காரில் சென்ற செந்தில்குமார், பிரவின்குமார் ஆகியோர் காய மடைந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்த போது, அங்கிருந்த காவல்துறை யினர் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையினரின் அஜாக்கிரதையால் ஜெயக்குமார் இறந்துள்ளார். இதற்கு காரணமான அய்யம்பேட்டை காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஜெயக்குமார் கொலை வழக்கில் உண்மையான  அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும்” என  கூறப்பட்டுள்ளது.