districts

img

தமிழக பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 22- தமிழக நிதி நிலை அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்து எதுவும் அறிவிக் கப்படாததை கண்டித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று திருச்சி மாவட் டத்தில் 28-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத் தலைவர் பால்பாண்டி தலைமையிலும் தொட்டியம் வட்டக் கிளையில் வட்டாட்சியர் அலுவல கம், ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரசு மருத்துவமனையில் மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சத்தியவாணி மற்றும் மணிவண்ணன் தலைமையிலும், முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் வட்டக் கிளை தலைவர் அமுதா, சித்ரா ஆகியோர் தலைமையிலும், துறை யூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் வட்டக் கிளை செயலாளர் மணிமாறன் தலை மையிலும், மணப்பாறை அரசு மருத்துவ மனையில் வட்டக் கிளை பொறுப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையிலும், மருங்காபுரி வட்டக் கிளையில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டக் கிளை  நிர்வாகிகள் தலைமையிலும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா ளர் பழனிச்சாமி, நீதித்துறை ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி தில்லைநாயகம், மாவட்டப் பொருளாளர் பாபு, வட்டக்  கிளை தலைவர் சுரேஷ்பிரபு, நெடுஞ்சாலை  துறை சங்க மாவட்ட நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.