தஞ்சாவூர், ஜன.14- நெய்வவிடுதியில் நடந்த சாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை தாலுகா பேராவூரணி ஒன்றி யம் பூவாளூர் ஊராட்சி, நெய்வவிடுதி யில் நடந்துள்ள, சாதிய ஆணவப் படு கொலையை வன்மையாக கண்டித்தும், தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதிய ஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திட தனி சிறப்புச் சட்டம் இயற்றிட கோரியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சனிக்கிழமை மாலை தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இரா.விஜய குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செய லாளர் ஆர்.கலைச்செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் கே.அபி மன்னன், ராஜா, மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் ப. சத்யநாதன், தமுஎகச மாநிலச் செய லாளர் களப்பிரன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, ஏ.ராஜா, விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.