districts

ஹெக்ஸ்ட் இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஏப்.22, 23-இல் அகில இந்திய வேலை நிறுத்தம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.18- ஹெக்ஸ்ட் அகில இந்திய மருந்து  விற்பனை பிரதிநிதிகள் சங்க பொதுச்  செயலாளர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது: ஹெக்ஸ்ட் அகில இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் என்பது மும்பையை தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் 800-க்கும்  மேற்பட்ட மருத்துவப் பிரதிநிதி தொழி லாளர்களைக் கொண்டு செயல்படும்  சங்கம் இது. முன்னணி பன்னாட்டு நிறுவ னமான சனோஃபி இந்தியா லிமிடெட் டின் விற்பனை ஊக்குவிப்பு ஊழி யர்கள், மருத்துவப் பிரதிநிதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பதிவு  செய்யப்பட்ட மற்றும் நிறுவனத்தா லும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கமாகும்.  போராடிப் பெற்றுள்ள தொழிற் சங்கப் பலன்கள் மற்றும் தொழிலாளர் நலன் சாந்த சட்டப்படியான அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கான முயற்சி களில் சனோஃபி இந்தியா லிமிடெட் நிர்வாகம் வெளிப்படையான தொழி லாளர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  “இந்தியாவுக்கான இந்தியா என்ற  பெயரில் தொழிலாளர் விரோத உத்தியை  செயல்படுத்தி வருகிறது. இந்த வகை யில் நியூட்ரா மருந்துகளை பிற நிறு வனத்திற்கு விற்பனை செய்ததன் விளைவாக 800-க்கும் மேற்பட்ட தனது  தொழிலாளர்களின் வேலையை திடீரென சனோஃபி இந்தியா லிமிடெட் நிறு வனம் பறித்து வெளியேற்றியது. புதிய  நியமனம் பெற்றவர்களாக வேறு இடங்களில் வேலை தேடும்படி அவர்களை கட்டாயப்படுத்துகிறது.  இதன்மூலம் சனோஃபி இந்தியா  லிமிடெட் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக  பல்லாண்டு காலமாக பாடுபட்ட தொழி லாளர்களை, பிற நிறுவனங்களின் நல னுக்காக செயல்பட மடைமாற்றம் செய்கிறது. இரண்டு பெரிய தொழிற்சாலை களில் உள்ள தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வூதியத் திட்டங்களை (விஆர்எஸ்) அறிவித்து, திணித்தது. மேலும் மருந்துகளின் விற்பனை நடவ டிக்கைகளை மேற்கொண்டு வந்த  தொழிலாளர்களை வேறு நிறுவனங் களில் வேலை தேடும்படி கட்டாயப் படுத்தியது போன்ற தொழிலாளர் விரோத செயல்பாடுகள் மூலம், சனோஃபி இந்தியா லிமிடெட் நிர்வாகம்  தங்களின் சட்டப்பூர்வமான பொறுப்பு களை நிறைவேற்றுவதில் இருந்து விலகி வெளிப்படையாகவே தொடர்ந்து  தவறிழைத்து வருகிறது.   பிற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது சனோஃபி இந்தியா லிமிடெட் நிறுவனம் தங்கள் ஊழியர்களின் நலனை விட லாபத்திற்கே முன்னுரிமை அளிக்கும் குறுகிய-தவறான வழியில் செயல்பட்டு வருகிறது. மேலும் நிறு வனம் வகுத்துள்ள குறைந்தபட்ச நியா யமான செயல்பாடுகளைகூட பின் பற்றாமல் தொழிலாளர்கள் பழிவாங்கப் பட்டு வருகின்றனர்.  இவ்வாறு தொழிலாளர்கள் விரோத  நடவடிக்கைகள் காரணமாக 66-க்கும்  மேற்பட்ட மருந்து விற்பனை தொழிலா ளர்களை நிறுவனத்தில் இருந்து வெளி யேற்றியுள்ளது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை தங்களின் நிலை என்ன என்று தெரியாமல் தவிக்கும் ஆபத் தான நிலைமைகளுக்கு தள்ளியுள்ளது.  இது போன்று தனது மருந்துகளை பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததில், சனோஃபி இந்தியா லிமி டெட் நிறுவனத்தற்கு உள்ளே உள்ள  அதிகாரிகளே பேராசையுடன் கூடிய சுய நலத்திற்காக செயல்பட்டு தவறிழைத்து  வருவது குறித்து பம்பாய் பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை மற்றும்  தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஆகியவற்றுக்கு முழுமையான விசார ணைக்காக தகவல்கள் அனுப்பப்பட்டு உள்ளன. மேலும் தொழிலாளர் விரோத நடவ டிக்கைகள் குறித்து சனோஃபி இந்தியா  லிமிடெட் மும்பை நிர்வாகத்திடமும், பாரிஸில் உள்ள தாய் நிறுவன தலைமை யகத்திற்கும், மாண்புமிகு மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் ஆணையர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பல முறை முறையிட்டும் எந்த தீர்வும் எட்டப் படாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே சனோஃபி இந்தியா லிமி டெட் மேனேஜ்மென்ட் தனது தொழிலா ளர்களை நடு இரவில் வேலை நீக்கம் செய்துள்ளது குறித்து உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு வேலை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும். பிற நிறுவனங்களின் லாப வெறிக்காக சனோஃபி இந்தியா லிமி டெட் நிறுவன மருந்து விற்பனை பிரதி நிதிகளின் அடிப்படை வாழ்வாதா ரத்தை சுரண்டும் போக்கை உடனடி யாக நிறுத்த வேண்டும்.  சனோஃபி இந்தியா லிமிடெட் நிறுவ னம் தொழிலாளர்களுக்கு உரிய நியா யம் வழங்கும் வகையில், தொழிலாளர் விரோத நடைமுறைகளை கைவிட்டு, நிலுவையில் உள்ள அனைத்து பிரச்ச னைகளுக்கும் தீர்வு கான வேண்டும்  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி யும், சனோஃபி இந்தியா லிமிடெட்டின் நியாயமற்ற செயல்பாடுகள் மற்றும்  தொழிலாளர் விரோத நடவடிக்கை களை கண்டித்தும் சனோஃபி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் சார்பில்  ஏப்.22, 23 ஆகிய இரு நாட்கள் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.  இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில்  தெரிவித்துள்ளார்.