districts

img

வேஸ்ட் பேப்பர் கடை முதலாளிகளை கண்டித்து சுமைப் பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.2 - திருச்சி ஈ.பி.ரோடு பகுதியில் உள்ள வேஸ்ட் பேப்பர் கடையில் கடந்த  20 ஆண்டுகளாக 42 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்து வரு கின்றனர். 

இந்நிலையில் வேஸ்ட் பேப்பர் கடை முதலாளி மதுரை உயர் நீதி மன்றம் சென்று, யாரை வேண்டுமானா லும் வேலைக்கு வைத்து கொள்ள லாம் என உத்தரவு பெற்றுள்ளார். அந்த  உத்தரவில், 20 ஆண்டு காலம் அங்கு  வேலை செய்யும் 42 தொழிலா ளர்களை வெளியேற்றவோ, வேலை நீக்கம் செய்யவோ எந்த உத்தரவும் இல்லை. 

கஞ்சித் தொட்டி திறப்பு அறிவிப்பு

இதைத் தொடர்ந்து, அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல், போலீசார் பாது காப்புடன் வெளி மாநிலத் தொழிலா ளர்களை வைத்து வேஸ்ட் பேப்பர் கடை முதலாளி லோடு ஏற்றுவதை கண்டித்தும், இங்கு பல ஆண்டு காலமாக வேலை செய்து வரும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை  வழங்க வலியுறுத்தியும் சிஐடியு சுமைப் ்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி போராட்டத்தில் ஈடுபட வந்த சுமைப்பணி தொழிலா ளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்ட தையடுத்து கஞ்சித் தொட்டி திறக்கும்  போராட்டத்தை கைவிட்டு ஆர்ப்பாட் டம் நடத்தினர்.

 ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா,  சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க  மாநிலக்குழு உறுப்பினர் மூர்த்தி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலா ளர் ரமேஷ், துணைத் தலைவர் மாறன்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.