districts

img

தில்லி காவல்துறையை கண்டித்து விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 5-  

    மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாஜக எம்.பி பிரஜ் பூஷண் ஷரண் சிங்கை கைது செய்யக் கோரியும், நீதிக்கேட்டு போராடிவரும் மல்யுத்த வீரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய தில்லி காவல்துறையை கண்டித்தும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரை ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் டி.சிம்சன், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முருகன், விவசாயிகள் சங்க (சிபிஐ) மாவட்டச் செய லாளர் வீரராஜ் மற்றும் ஐக்கிய விவசாயி கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப் பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.