தோழர் தங்கராசு நினைவு தினம்
திருத்துறைப்பூண்டி, செப்.17 - இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவா ரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டி மூத்த தோழர் தங்கராசுவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட் டது. இந்நிகழ்வில் தோழர் தங்கராசுவின் மகன் விளக்குடி ஊராட்சி செயலர் முத்தமிழ் செல்வன் வரவேற்றார். கொத்தமங்கலத் தில், எம்.சிவசங்கரன் தலைமையில் நினைவு தின கூட்டம் நடை பெற்றது. தங்கராசு உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ் வில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கோ. பழனிச்சாமி, சிபிஐ மாவட்ட செயலாளர் வை.செல்வ ராஜ், சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து உள்ளிட்ட பலர் உரை யாற்றினர்.
பெரியார் சிலைக்கு மரியாதை
பெரம்பலூர், செப்.17 - தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் பழைய பேருந்து நிலை யம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு போக்கு வரத்துத் துறை அமைச் சர் சா.சி.சிவசங்கர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபா கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசோன் தின விழா
தஞ்சாவூர், செப்.17- தஞ்சாவூர் ஸ்ரீசதா சிவா பள்ளியில் உலக ஓசோன் தின விழா கொண் டாடப்பட்டது. செப்.16 உலக ஓசோன் தினத்தை யொட்டி, மாணவர் களுக்கு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது. சிறப்பு நிகழ்வாக ஓசோன் படலம் பாது காப்பு குறித்த கருத்த ரங்கம் நடத்தப்பட்டது. பள்ளி செயலாளர் ஜெய் சங்கர் தலைமை வகித்து உரையாற்றினார். தலைமை ஆசிரியர் வர வேற்றார். மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழ் நாடு அறிவியல் இயக்க மாநில துணைத்தலைவ ரும், குந்தவை நாச்சி யார் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியருமான வெ. சுகுமாரன் ஓசோன் தின அறிவியல் கருத்துரை ஆற்றினார்.
சித்த மருத்துவமனை திறப்பு விழா
தஞ்சாவூர், செப்.17- தஞ்சாவூர் மாவட் டம் பேராவூரணி சேதுசா லையில், சித்த மருத்துவ மனை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, முது நிலை சித்த மருத்துவர் அருண்குமார் வரவேற் றார். ஓய்வு பெற்ற ஆசிரி யர் சதாசிவம், பட்டுக் கோட்டை நல்வழிக் கொல்லை சித்தர், தொழி லதிபர் ஏசியன் சம்சு தீன், கூப்புளிக்காடு பிஷப் பவுல்ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளர் களாக சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டார். சித்த மருத்துவரும், இயற்கை விவசாயியு மான மருத்துவர் அருண் குமார், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு, தனது வயலில் இயற்கை முறையில் விளைவிக்கப் பட்ட யானைக்கவுனி அரிசி தலா அரை கிலோ வீதம் வழங்கினார்.
ஆர்.டி.பி. கல்லூரியில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு குறித்த மாநாடு
பாபநாசம், செப்.16 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்டிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு’ குறித்த சமகால ஆராய்ச்சிக்கான சர்வதேச மாநாடு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முகமது முகை தீன் வரவேற்றார். ஆர்டிபி கல்விக் குழு மத்தின் தலைவர் தாவூத் பாஷா, துணைத் தலைவர் ராபியா பேகம் பங்கேற்றனர். மாநாட்டில், துபாய் வில்லிங்டன் எஜூகேசன் கேம்பஸ் டீன் டா.ரம்யா தயானந்தன் இணைய வழி மூலம் இ-மார்க்கெட்டிங் மற்றும் அதன் பயன் கள் குறித்தும், திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டா.ரேவதி - மின்வர்த்தக தேவை, அதன் நிறைகுறைகள் குறித்தும், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக் கழக பொருளியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலை வர் டா. அருணாச்சலம் மற்றும் திருச்சி தந்தை பெரியார் கல்லூரி பேரா. டாக்டர் பாலமுருகன் ஆராய்ச்சி தாள்களை இணையவழி வாயிலாக எப்படி தயார் செய்வது மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் 15 கல்லூரிகளின் பேராசி ரியர்கள் மற்றும் 150 மாணவ-மாணவி கள் கலந்து கொண்டனர். ஆர்டிபி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் காரல் மார்க்ஸ், செயல் அலுவலர் அகமது ராஜா, இராஜகிரி தாவூத் பாட்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் தங்கமலர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வழிகாட்டி முகாம் கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு வழிகாட்டி முகாமிற்கு, ஆர்.டி.பி கல்வி குழுமத்தின் தலைவர் தாவூத் பாட்ஷா தலைமை வகித்தார். இதில் விடார்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமி டெட் நிறுவனத்தின் பொது மேலாளர் டேரிக் அலெக்ஸ், மனிதவள அலுவலர் சுமதி செல்வராஜ் ஆகியோர் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதல் குறித்து பேசினர்.
கொள்ளை வழக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது
அறந்தாங்கி, செப்.17 - கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் 3 ஆண்டுகளுக்கு பிறது கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி யில் பழைய வழக்குகளை விரைந்து கண்டு பிடிக்க காவல்துறையினருக்கு சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தி தனிப்படை அமைக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மணமேல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவன்கோயில் தெருவைச் சேர்த்த தெய்வீகரமணி (65) என்ற மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை மற்றும் பணம் ஆகியவை திருடப்பட்டன. இந்த திருட்டில் ஈடுபட்டவரை தேடி வந்த நிலையில், செப்.16 அன்று, இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தைச் சேர்ந்த சீனி நூர்தீன் (65) என்பவரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். இவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டன. மூன்று ஆண்டு களுக்குப் பிறகு நகைகளை மீட்டுக் கொடுத்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் தலைமையிலான காவல்துறையி னருக்கு பாதிக்கப்பட்ட மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சீனி நூர்தீன் 30-க்கும் மேற்பட்ட திருட்டு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், செப்.17- தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி, 2023-2024 க்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலை யத்தில் நடைபெற்று வருகிறது. முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்வதற்கு, செப். 22 அன்று 5 மணி வரை விண்ணப்பம் பெறப்பட உள்ளது. விண்ணப்பங்களை www.tncuiem.com என்ற இணையதள முகவரி யில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள அனைத்துக் விபரங்களையும் முழு மையாக பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணம் ரூ.100-ஐ ஆன்-லைனில் செலுத்த வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் செலான் நகலை பதிவிறக்கம் செய்து அதில் கையொப்பமிட்டு, அதனை மேலாண்மை நிலையத்தில் நேரிலோ, கொரி யர் அல்லது பதிவு தபால் மூலமாகவோ செப்.22 அன்று மாலை 5 மணிக்குள், முதல்வர், சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலை யம், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் - 613007 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் பிளஸ் 2 தேர்ச்சியும், 17 வயது பூர்த்தி அடைந் தவராகவும் இருத்தல் வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. எஸ்சி/எஸ்.டி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை பெற்றுத் தரப்படும். முன்னாள் ராணு வத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற வர்கள் மற்றும் பட்டதாரிகளும் இப்பயிற்சியை பெறலாம்” என தெரிவித்துள்ளார்.
அன்னதானம் வழங்குவோர் உணவுப் பாதுகாப்பு பதிவுச் சான்று பெறுவது கட்டாயம்
கரூர், செப்.17 - கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் திருவிழா 23.9.2023 முதல் 14.10.2023 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குப வர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-ன் படி, கட்டாயம் பதிவுச் சான்று கட்டாயம் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கு பவர்கள் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்று foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் உணவுப் பாதுகாப்பு பதிவுச் சான்று பெற விண் ணப்பித்து, ஆன்-லைன் வாயிலாக சான்றிதழ் களை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அன்னதானம் வழங்குபவர்கள் சமைப்ப தற்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்க ளில் அதன் பெயர் மற்றும் தயாரிப்பாளர் முகவரி, காலாவதி தேதி கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் தலையுறை, கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும். உணவு மாதிரிகளை தவறாமல் எடுத்து வைக்க வேண்டும். உணவு வழங்கும் போது சுகாதாரமாகவும், சமையல் செய்யும் இடத்தை சுத்தமாகவும் வைக்க வேண்டும். பதிவுச் சான்று சம்பந்தமாக கரூர் நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலரை 7200244045 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் அன்னதானம் வழங்குவது குறித்து தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி - நியமன அலுவலர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, நெ.66, இணைப்புக் கட்டிடம், மாவட்ட ஆட்சியரக வளாகம், தாந்தோணிமலை, கரூர். தொலைபேசி எண்கள்: 04324–255347 என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரி வித்துள்ளார்.
விநாயகர் சிலைகளை அமைதியாக கரைக்க அறிவுறுத்தல்
கும்பகோணம், செப்.17- தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை (செப்.18) விநா யகர் சதூர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்து, காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் பல்வேறு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இதில், எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் அமைதி யான முறையில் விநாயகர் சிலைகளை கரைக்க வலியுறுத்தப்பட்டது. கும்பகோணம் வருவாய் கோட்டத்தில் முதற்கட்ட மாக 63 விநாயகர் சிலைகள் செப்.19 அன்று, கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், காவல்துறை துணை கண்காணிப்பா ளர் கீர்த்திவாசன் தலைமையில் மகாமகக் குளக்கரை யில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பாலக்கரை வரை ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார், ஊர்க்காவல் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
திருவாரூரில் விசிக மைய அலுவலகம் திறப்பு
திருவாரூர், செப்.17- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவாரூர் மைய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செய லாளர் உஞ்சைஅரசன் தலைமை ஏற்று அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில துணைச் பொதுசெயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார். மைய மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முன்னதாக தந்தை பெரியார் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் பழைய பேருந்து நிலை யத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அலுவலக திறப்பு விழாவில் திமுக மாவட்ட செய லாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே.கலை வாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அன்பு.வீரமணி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க 24 ஆம் ஆண்டு விழா
பெரம்பலூர், செப்.17 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியா ளர்கள் சங்க 24 ஆம் ஆண்டு உதய தினம் செப்.17 (ஞாயிறன்று) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை, குன்னம் மற்றும் பெரம்பலூர் உதவி கோட்ட பொறி யாளர் அலுவலகம் முன்பு கொடியேற்று விழா நடை பெற்றது. வேப்பந்தட்டை உட்கோட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.பழனிசாமி கொடியேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். குன்னம் உட்கோட்டத்தில் பொருளாளர் சுப்ரமணி யன் கொடியேற்றி துவக்கி வைத்தார். பெரம்பலூரில் கோட்ட செயலாளர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க கொடியை அச்சங்கத்தின் மாவட்டத் தலை வர் சிவக்குமார் ஏற்றினார். நிகழ்ச்சிக்கு கோட்டத் தலைவர் பி.ராஜ்குமார் தலைமை வகித்தார்.
போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தொடர் காத்திருப்பு போராட்ட ஆயத்த கூட்டம்
திருச்சிராப்பள்ளி, செப்.17 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தொடர் காத்திருப்பு போராட்ட ஆயத்த கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மண்டல தலைவர் சேகர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி புதுக் கோட்டை மாவட்ட துணைத்தலைவர் லோகநாதன், செய லாளர் இளங்கோவன், திருச்சி மண்டல செயலாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாநில துணைத்தலைவர் சண்முகம் ஆகியோர் பேசினர். 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப் படி உயர்வை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு ரூ.300 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியர் களுக்கும் மருத்துவப்படி வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றோருக்கான பணப் பலன்களை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல அலுவலகம் முன்பு செப்டம்பர் 26 அன்று முதல் நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இதில் திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை மண்ட லத்தை சேர்ந்த ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
வாழைத்தார் திருடிய இருவர் கைது
தேனி, செப்.16- உத்தமபாளையம்-கோம்பை சாலையில் வாழைத் தோட்டம் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு கார் நின்றது. அதிலிருந்து சிலர் பாதர்கான்பாளையத்தை சேர்ந்த விவ சாயி தோட்டத்தில் புகுந்தனர். அங்கு வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்தனர். இதனை நோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்த னர். அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து காரை மடக்கி பிடிக்க முயன்றபோது 2 பேர் சிக்கினர். அவர்களை உத்தம பாளையம் காவல்நிலையத்தில் விவசாயிகள் ஒப்படைத்த னர். போலீசார் விசாரணையில் வாழைத்தார் திருடி யது யோகேஸ்வரன், சூர்யா என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய புதியவன், அசோக், மாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.
குமரியில் தொடர்ந்து மழை நீடிப்பு: அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
நாகர்கோவில், செப்.17- குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. காலையிலும் மழை நீடித்தது. நாகர் கோவிலில் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. கோழிப்போர்விளையில் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 32.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. களியல், தக்கலை, அடையாமடை, கொட்டாரம், மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவிப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான ஞாயிறன்று அருவி யில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணி கள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பால மோர் பகுதியிலும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ஞாயிறன்று காலை 17.56 அடியாக இருந்தது. அணைக்கு 677 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 581 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 213 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு வருமாறு: பேச்சிப்பாறை 7.6 மில்லி மீட்டர், பெருஞ்சாணி 17.2, பூதப்பாண்டி 6.4, களியல் 20.6, குழித்துறை 26.4, கொட்டாரம் 14, மயிலாடி 8.4, நாகர்கோவில் 7.2, சுருளோடு 17, தக்கலை 19, குளச்சல் 6, இரணியல் 8.2, பாலமோர் 19.4, மாம் பழத்துறையாறு 20.6, திற்பரப்பு 16.8, கோழிப் போர்விளை 32.2, அடையாமடை 14.3, குருந்தன்கோடு 14.4, ஆணைக்கிடங்கு 8.4, முக்கடல் 9.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
அரசு வழங்கிய நிலத்தை 43 வருடங்களாக
மீட்க முடியாமல் தவிக்கும் பட்டியலின மக்கள்
ஒட்டன்சத்திரம், செப்.17- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூட லிங்கபுரத்தில் 43 வருடங்களுக்கு முன்பு பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கியும் இதுவரை நிலத்தை மீட்டு தராததை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பட்டியலின மக்கள் அறிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 1-ஆவது வார்டுக்கு உட்பட்ட கூடலிங்க புரத்தைச் சேர்ந்த ஏழை, எளிய பட்டியலின மக்கள் 48 பேருக்கு 1981-ஆம் ஆண்டு அருகில் உள்ள ஒருவருக்கு சொந்தமான நிலத்தை தானமாக பெற்று, அரசு மூலம் ஒவ்வொரு நபருக்கும் தலா 5 சென்ட் வீதம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதற் கான வரைவு நகலும் அந்தந்த பயனாளிக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 43 ஆண்டு களாக நிலத்தை மீட்ட தர வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட ஆட்சிய ரிடமும் தொடர்ந்து புகார் அளித்தும் இது வரை பட்டியலின மக்களுக்கு நிலத்தை அரசு வழங்கவில்லை. மேலும் பட்டியலின மக்கள் என்பதால் அந்த நிலத்திற்குள் அவர்கள் செல்ல அனு மதிக்கப்படவில்லை. நிலத்தை மீட்டு தர வில்லை என்றால் தலித் அமைப்புகளு டன் சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்தப் படப் போவதாக தெரிவித்துள்ளனர். பட்டியலின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள் ளது.
சிபிஎம் கோரிக்கை வெற்றி இராமநாதபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் அதிவிரைவு ரயில்கள்
தெற்கு ரயில்வே அறிவிப்பு
தெற்கு ரயில்வே அறிவிப்பு இராமநாதபுரம், செப்.17- வாராந்திர அதிவிரைவு ரயில்கள் இராம நாதபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, 20973 அஜ்மீர்-இராமேஸ்வ ரம், 20974 இராமேஸ்வரம்-அஜ்மீர் முற்றி லும் குளிர் சாதன வசதியுடன் கூடிய வாராந்திர அதிவிரைவு ரயில் செப்டம்பர் 26 முதல் புதுக்கோட்டை, இராமநாதபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோல், 22613 இராமேஸ்வரம்-அயோத்யா, 22614 அயோத்யா-இராமேஸ்வரம் சாரதா சேது அதிவிரைவு ரயில் செப்டம்பர் 24 முதல் காரைக்குடி-இராமநாதபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சிபிஎம் கோரிக்கை வெற்றி இதுதொடர்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தென்னக ரயில்வே அதிகாரி யிடம் மனு கொடுக்கப்பட்டது. மேலும் கட்சி யின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாத துரை, தாலுகா செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமையில் மறியல் இயக்கமும் நடைபெற்றது என்பது குறிப்பி டத்தக்கது.