districts

img

தோழர் சீதையம்மாள் காலமானார்

திருவாரூர், டிச.30 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கம் ஊராட்சி, தொழுவனங்குடி யில் வசித்த மறைந்த தோ ழர் வி.அஞ்சானின் துணைவி யார் சீதையம்மாள் (68) உடல் நலக்குறைவால் வியா ழக்கிழமை காலமானார். அம்மையாரின் மறைவு  செய்தி அறிந்து தொழுவ னங்குடியில் உள்ள அவரது  இல்லத்திற்கு நேரில் சென்ற  சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், சிபிஎம் நாகை மாவட் டச் செயலாளர் வி.மாரி முத்து, விவசாயத் தொழிலா ளர் சங்க மாநில துணைத்  தலைவர் எம்.முருகையன் ஆகியோர் அவரது உடலுக்கு  மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.சேகர், எம்.கலைமணி, கொர டாச்சேரி ஒன்றியச் செயலா ளர் டி.ஜெயபால், மாவட்ட,  ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் அஞ்சலி செலுத்தி னர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மறைந்த சீதையம்மாள், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கத்தின் மாமி யார் என்பது குறிப்பிடத் தக்கது.