சிபிஎம் கீழையூர் மேற்கு ஒன்றியம் சார்பில் முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி பேரவை கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் டி.வெங்கட்ராமன் தலைமையில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, தோழர் சங்கரய்யா உருவப்படத்தை திறந்து வைத்து நினைவஞ்சலி உரையாற்றினார்.