கும்பகோணம்,நவ.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் ஒன்றியக்குழு உறுப்பின ரும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர் சங்க முன்னாள் பொருளாளரு மான தாமோதரன், திரு ஞானம் ஆகியோரின் தாயார் சாரதாம்பாள் அவர்கள் மறைவையொட்டி அம்மை யாரின் படத்திறப்பு நினை வேந்தல் நிகழ்ச்சி நடைபெற் றது. கும்பகோணம் அருகே உள்ள முழையூர் சமத்துவ புரத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் கட்சியின் கும்ப கோணம் ஒன்றியச் செயலா ளர் கணேசன் தலைமை வகித்தார் பேராசிரியர் தங்க முத்து முன்னிலை வகித்தார். அம்மையாரின் படத்தை பேராசிரியர் அரங்க. சுப் பையா திறந்து வைத்து, உரையாற்றினார். இந் நிகழ்ச்சியில் சிஐ டியு மாவட்ட தலைவர் கண் ணன் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன், தலைவர் காரல் மார்க்ஸ் போக்குவரத்து ஓய்வு பெற றோர் சங்க பொறுப்பாளர் பாஸ்கர் .சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர் மனோகரன், கே.அருள்அர சன், மாவட்ட குழு உறுப்பி னர் நாகராஜன், செந்தில் குமார் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.