திருவாரூர், ஏப்.16 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் பெரும்பண்ணை யூர்-இலந்தவனஞ்சேரி, வடக்குத் தெருவில் வசிக்கும் சிபிஎம் உறுப்பினரும், வெகுஜன அரங்கில் பல்வேறு பொறுப்பு களில் வகித்தவருமான எஸ்.நாகராஜின் சகோதரர், மக்கள் நலப் பணியாளர் எஸ்.ராமசாமி திங்கட்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு செய்து அறிந்து, சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் ஆகியோர் அன்னாரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலை மணி, குடவாசல் ஒன்றியச் செயலாளர் எம்.கோபிநாத், நகரச் செய லாளர் டி.ஜி.சேகர் மற்றும் வர்க்க வெகுஜன நிர்வாகிகள் பங்கேற்றனர்.