தஞ்சாவூர், ஜன.11 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரும், நகர வர்த்தகர் சங்க துணைத் தலைவருமான தோழர் சுகி என்ற சு.கிருஷ்ணமூர்த்தி (71) கடந்த டிச.27 அன்று காலமானார். அன்னாருடைய படத்திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை பட்டுக்கோட்டையில் நடை பெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரியரு மான மதுக்கூர் இராமலிங்கம் படத்தை திறந்து வைத்து பேசினார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கோ.நீல மேகம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.தமிழ்ச்செல்வி, என்.சிவகுரு, எம்.செல்வம், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.என்.ராமச்சந்திரன், திமுக தலைமை கழகப் பேச்சாளர் மணிமுத்து, முன்னாள் நகர மன்றத் தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வர்த்தக பிரமுகர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியி னர் பலர் கலந்து கொண்டனர்.