districts

img

ஆலங்குடியில் தோழர் ஆர்.உமாநாத் பிறந்ததின உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை, டிச.21-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவர் ஆர்.உமாநாத் அவர்களின் 102-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடி யில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை மாவட்டம் திரு வரங்குளம் மேற்கு ஒன்றியக்குழு வின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு ஒன்றியச் செயலாளர் எல். வடிவேல் தலைமை வகித்தார். தோழர் ஆர்.உமாநாத்தின் படத் தைத் திறந்து வைத்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந் தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம். சின்னதுரை புகழஞ்சலி உரை யாற்றினார். தோழர் ஆர்.உமாநாத் உயர்த்திப் பிடித்த கொள்கைகளை பின்பற்றுவது என்றும், பட்டி, தொட்டி எங்கும் கட்சியை விரிவு படுத்துவது எனவும் உறுதி மொழி ஏற்கப்பட்டது.  ரூ.1.52 லட்சம்  பக்கெட் வசூல் மேலும், கட்சியின் திருவரங் குளம் மேற்கு ஒன்றியக்குழு சார் பில் வெகுஜன மக்களிடம் பக்கெட் மூலமாக வசூல் செய்யப்பட்ட ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்து 830 ரூபாயை மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சு.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சுசிலா, எஸ். பாண்டிச்செல்வி, நகரச் செயலா ளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.