districts

img

தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி பயணிகள் நிழலகம்: நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், பிப்.7- தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நினைவாக கட்டப்பட்ட பயணிகள் நிழலகத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி புதனன்று திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் பாங்கல் ஊராட்சியில் பிறந்தவர் தோழர் பி.எஸ். தனுஷ்கோடி. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதி ராக களம் கண்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொண்டாற் றியவர். ஒன்றிய பெருந்தலைவர், சட்டமன்ற  உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டவர். அவரது நினைவாக, அவர் பிறந்த பாங்கல் ஊராட்சியில் பயணி கள் நிழலகம் திறக்கப்பட்டது.  கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.40 லட்சம் செல வில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழலகத்தை சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி புதனன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சிபிஎம் தலைஞாயிறு ஒன்றி யச் செயலாளர் ஏ.ராஜா, கீழையூர் மேற்கு திமுக  ஒன்றியச் செயலாளர் சோ.பா.மலர்வாணன், பாங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.