districts

img

தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருவாரூர், ஆக.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டத் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.எஸ். தனுஷ்கோடியின்  26-ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.  கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, நகர் செயலாளர் எம்.தர்மலிங்கம், ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், அலுவலகச் செயலாளர் எம்.கலைமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, சிஐடியு மாவட்டப் பெருளாளர் இரா.மாலதி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.