districts

img

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தின பொதுக் கூட்டம்

கும்பகோணம், டிச.16 - கும்பகோணத்தில் விடாத மழை யிலும் பி.ராமமூர்த்தி நினைவு தின செஞ்சட்டை பேரணி, பொதுக் கூட்டம்  நடைபெற்றது. விடுதலைப் போராட்ட வீரரும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவருமான தோழர் பி.ராம மூர்த்தியின் 36 ஆவது நினைவு தினத்தை  முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் செஞ்சட்டை பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மாநகரச் செயலா ளர் செந்தில்குமார் வரவேற்றார். மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு செய லாளர்கள், கும்பகோணம் மாமன்ற உறுப்பினர் ஆர்.செல்வம் உட்பட கட்சி யின் அனைத்து கிளை உறுப்பினர் களும் பங்கேற்றனர். மாநகரக் குழு உறுப்பினர் எம்.கண்ணன் நன்றி கூறி னார். முன்னதாக, மழை பொழிவிற்கு இடையிலும் செஞ்சட்டை பேரணி நடை பெற்றது. இப்பேரணி, கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பழைய மீன்  மார்க்கெட் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணியில், சிபிஎம், சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர் சங்கத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து  கொண்டனர்.