districts

img

தோழர் என்.சங்கரய்யா நினைவு கொடிமரம் அமைப்பு

புதுக்கோட்டை,  டிச.22 - சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா நினைவாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த கரு.தெற்குத் தெருவில்  கல்வெட்டுடன் கூடிய கொடிமரம் அமைக்கப்பட்டது. தோழர் என்.சங்கரய்யா நினைவுக் கல்வெட்டை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை திறந்து வைத்தார். கட்சிக் கொடியை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஏற்றி வைத்தார். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பாலசுந்தரமூர்த்தி, கறம்பக்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.சக்திவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் செல்ல.பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.