கரூர், டிச.23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான தோழர் என்.சங்க ரய்யா படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை யில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். தோழர் என்.சங்கரய்யா படத்தை கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு திறந்து வைத்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் என்.எஸ். வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்புரையாற்றி னார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.