districts

img

சிபிஐ மூத்த தோழர் கிருஷ்ணன் காலமானார்

தஞ்சாவூர், செப்.13 -  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட முன்னணி தலைவர்களில், ஒரு வருமான தோழர் கிருஷ்ணன் புதன்கிழமை தஞ்சாவூர் கட்சி அலுவலகத்தில் கால மானார்.  திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த  கிருஷ்ணன் (81) இளங்கலை பொருளா தார பட்டப் படிப்பு முடித்து, அரசுத் துறை யில் பணியாற்றி வந்தார். தஞ்சாவூருக்கு பணி மாறுதலில் வந்த அவர் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தங்கினார்.  பின்னர், அரசுப் பணியை கைவிட்டு, முழு நேரமும் கட்சிப் பணியாற்றினார்.  மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், மாநிலக் குழு  உறுப்பினர், மாநிலக் கட்டுப்பாட்டு குழு  உறுப்பினர் பொறுப்புகளை வகித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற  இவர் திருமணம் செய்து கொள்ள வில்லை. சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்ட்டிருந்த கிருஷ்ணன் புதனன்று கட்சி அலுவலகத்திலேயே உயிரிழந்தார்.  சிபிஐ மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.  சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ப ராயன், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து,  பழனிச்சாமி, தமிழ்தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன், மக்கள் அதிகாரம் காளியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டி யன். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர். மனோகரன், பி.செந்  தில்குமார், என்.வி. கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.குருசாமி, மாநகர் செயலாளர் வடிவேலன் உள்ளிட்ட பலர் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.