districts

img

தோழர் கரியப்பட்டி காமராஜ் மறைவு கே.பாலகிருஷ்ணன் நேரில் அஞ்சலி

தஞ்சாவூர், ஆக.26 -  

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சா வூர் மாவட்டக் குழுவின் முன்னாள் உறுப்பின ராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  முன்னாள் மாவட்டத் தலைவராகவும் செயல்பட்ட தோழர் கே.காமராஜ் சனிக் கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமா னார்.

     இவர் கரியப்பட்டி என்ற ஒரு குக்கி ராமத்தில் பிறந்து, கடைசி வரை கட்சியின்  பற்றாளராக இருந்தார். இவரது மறைவுச் செய்தி அறிந்த கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத் துரை, மூத்த தோழர் என்.சீனிவாசன் ஆகி யோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நட ராஜன், மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு  உறுப்பினர்கள், பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், தஞ்சை ஒன்றிய செய லாளர் கே.அபிமன்னன், திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஆ.ராஜா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.