தஞ்சாவூர், மார்ச் 13- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம், வெண்டையம்பட்டியில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளின் சார்பில், மறைந்த தோழர் கே.ரெத்தினம் 47 ஆவது ஆண்டு நினைவு தின பொதுக் கூட்டம் நடைபெற்றது. செவ்வாயன்று நடந்த இக்கூட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் எம்.பேல்ஸ்ராஜ், எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்தனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம். ஜெயசீலன், மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச் செல்வி, ஒன்றியச் செயலாளர்கள் சி.பாஸ்கர் (பூதலூர் தெற்கு), எம்.ரமேஷ் (பூதலூர் வடக்கு), கே.அபிமன்னன் (தஞ்சாவூர்) ஆகி யோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது. சிலர் தங்களை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். முன்ன தாக தியாகி என்.வி.கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.