கரூர், செப்.4- கரூர் மாவட்டக் கட்டு மானச் சங்க மாவட்டத் துணைச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக் குழு உறுப்பினருமான கே. பரமேஸ்வரன் கடந்த மே மாதம் காலமானார். அவரது படத்திறப்பு-நினைவேந்தல் கூட்டம் புகளூரில் நடை பெற்றது. முறை சாரா சங்கங்களின் கரூர் ஒன்றியக் குழு ஒருங்கி ணைப்பாளர் எம்.ராஜேந்தி ரன் தலைமையில் நடை பெற்ற படத்திறப்பு நிகழ் விற்கு கட்டுமான சங்க மாவட் டத் தலைவர் ப.சரவணன் முன்னிலை வகித்தார். கட்டுமான சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி. குமார் பரமேஸ்வரனின் படத் தைத் திறந்து வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜா முஹமது, அ.காதர்பாட்சா, ஆர்.துரைசாமி, எம்.ராஜேஸ் வரி, செல்வி உள்ளிட்ட நூற் றுக்கும் மேற்பட்ட முறை சாரா தொழிலாளர்கள்- பர மேஸ்வரனின் குடும்பத்தி னர் கலந்து கொண்டனர்.