மன்னார்குடி, பிப்.18- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட முன் னாள் தலைவர் இரா.தாமோதரன் 2 ஆவது நினைவு தின கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியிட்டு விழா மன்னார்குடியில் நடைபெற்றது. தமுஎகச திருவாரூர் மாவட்ட குழு மற்றும் மன்னார்குடி கிளையின் சார்பாக நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்டத் தலைவர் மு. சௌந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்த னர். கிளைத் தலைவர் கே.வி.பாஸ்கரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்கடேசன் துவக்க உரையாற்றினார். ‘தோழர் தாமோத ரன் அகமும் புறமும்’ என்னும் நூலை தமுஎகச மேனாள் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் வெளி யிட, அதை தோழர் இரா.தாமோதரன் குடும்பத் தார், மாவட்ட துணைச் செயலாளர் கே.பிச்சைக் கண்ணு மற்றும் கவிஞர் சரஸ்வதி தாயுமான வன் பெற்றுக் கொண்டனர். தோழர் தாமோதரனின் நினைவுகளை போற்றி, சிபிஎம் மூத்த தோழர் என்.சீனிவா சன், முனைவர் இரா.காமராசு, மாநில துணை பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன், தமிழ் நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலை வர் வ.சேதுராமன், தஞ்சை மாவட்டச் செயலா ளர் இரா.விஜயகுமார், முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் ஜே.சாந்தமூர்த்தி உள்ளிட் டோர் பேசினர். தமுஎகச மேனாள் மாநிலத் தலைவர் ச. தமிழ்செல்வன் நினைவு சிறப்புரையாற்றினார். கிளைச் செயலாளர் தியாக சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார். விழாவில் தோழர் தாமோ தரனின் துணைவியார் ராதா தாமோதரன் மற்றும் மகள்கள் பங்கேற்றனர்.