districts

img

தோழர் டி.முருகேசன் துணைவியார் உட்கோட்டை சாரதாம்பாள் மறைவு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

அரியலூர், ஜன.3 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளர் மறைந்த தோழர் டி.முருகேசன் அவர்களின் மனைவி சாரதாம்பாள் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிறன்று இயற்கை எய்தி னார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய  செயலாளர் வெங்கடாசலம், மூத்த தலைவர்  எஸ்.என்.டி துரைராஜ், செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மணிவேல், கே.மகாராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.புனிதன்  கே.சேகர், வீ.வீரப்பன், டி.தியாகராஜன், எஸ்.பி. சாமிதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது மகன் மாக்சிம் கார்க்கி, மகள் சந்திரா, மருமகள் ராதிகா ஆகியோருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் திங்களன்று நடந்த  இறுதி நிகழ்ச்சியில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.