திருவாரூர், மார்ச் 23 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் கொக்கலாடி கிராமத்தில் மாதர் சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவராக செ. ரேவதி உள்ளார். இவரது கணவர் தோழர் செல்லப்பா கடந்த சில வாரங்களுக்கு முன் காலமானார். மறைந்த தோழர் கே. செல்லப்பாவின் படத்திறப்பு கொக்கலாடியில் உள்ள அவரது இல்லத்தில் சனிக் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என்.இராதா தலைமை வகித்தார். தோழர் செல்லப்பாவின் உருவப்படத்தை சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றி னார். மாவட்டக் குழு உறுப்பி னர் கே.சுப்பிரமணியன் மற்றும் ஒன்றியக் குழு உறுப் பினர்கள், கிளை செயலா ளர்கள் கலந்து கொண்டனர்.