districts

img

உஞ்சினி கிராமத்தில் தோழர் அண்ணாதுரை படத்திறப்பு

அரியலூர், ஜன.8- செந்துறையில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பி னர் வி.அண்ணாதுரையின் உருவப்படத் திறப்பு விழா நடைபெற்றது.  அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உஞ்சினி  கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி வட்டக்குழு உறுப்பினராகவும் கை நெசவு தொழிலாளர் சங்க அரியலூர் மாவட்ட நிர்வாகியாக செயல்பட்டவர் தோழர் வி.அண்ணாதுரை. மறைந்த  வி. அண்ணாதுரையின் படத்திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செந்துறை வட்ட செயலாளர் கு.அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்றது. அவரது உருவப் படத்தை கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல் துரைசாமி, எ.கந்தசாமி, எம்.வெங்கடா சலம் , வி..பரமசிவம், துரைஅருணன், டி.அம்பிகா, மாவட்டக்குழு உறுப்பினர் பி.அழகுதுரை,  திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பூ. செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலா ளர் ம.கருப்புசாமி  மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.பத்மாவதி, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் எஸ்.மணிவேலன் கைநெசவு மாவட்ட தலைவர் எஸ்.என்.துரைராஜ், உள்ளிட்ட பலரும் புகழஞ்சலி செலுத்தினர். இதில் அண்ணாதுரையின் மகன் சத்தியமூர்த்தி, மகள்கள் லைலா, செங்கொடி ஆகியோரும் பங்கேற்றனர்.