புதுக்கோட்டை, டிச.6 - மண்வளத்தைப் பாதுகாக்க விவ சாயிகள் அனைவரும் மண் பரிசோதனை கொள்வது அவசியம் என்றார் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலக மண் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தலைமை வகித்து ஆர்.ராஜ்குமார் பேசுகையில், மண் வளத்தை பாதுகாப்பது மற்றும் வளம்குன்றா மேலாண்மைகளை கடைப்பிடிப்பதே உலக மண் தினத்தின் நோக்கம். நடப்பாண்டிற்கான கருப்பொருள் மண் உவர்த்தன்மை அடைவதை தடுத்து மண்ணின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகும். மண்வளத்தை பாதுகாப்பதில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், மண் பரிசோதனை செய்வதால் மண்வ ளத்தைப் பாதுகாக்கவும், இடுபொருட்கள் செலவை குறைக்கவும், அதிக மகசூல் பெறவும் வழிவகை செய்யும் என்றார். வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.எம்.இந்துமதி விவ சாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.