districts

img

தோழர் எம்.வேதையன் நினைவு தினம்

திருத்துறைப்பூண்டி, அக்.20-  முதுபெரும் தலைவரும் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுத்ததில் முன்னணி பங்கு வகுத்தவருமான தோழர் வேயன்னா என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் எம்.வேதையனின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, வேதை சாலை முல்லை ஆற்றங்க ரையில் அமைந்துள்ள தோழர் வேதையன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும், பின்பு காமராஜர் சாலையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் கே.கோபு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் டி.வி.காரல் மார்க்ஸ், வி.டி.கதிரேசன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். சிபிஎம் தமிழ் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் தோழர் வேயன்னா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வாலிபர், மாதர் சங்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நகரமன்ற துணைத் தலைவர் எம்.ஜெயபிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் கு.வேதரத்தினம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.