districts

கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 18 -

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரி முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில்  திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொருளாளரும், கிளை தலைவருமான முனை வர் சேவியர் செல்வக்குமார் தலைமை வகித்தார். கிளை  செயலாளர் ஸ்ரீதர் தங்கதுரை, பொருளாளர் ஜெயராஜ், துணைத்தலைவர் கோபிநாத், இணைச் செயலாளர் ஷீலா எட்வர்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    பல்கலைக்கழகத் தன்னாட்சி உரிமையைப் பறிக்கின்ற, தரமற்ற பொதுப் பாடத்திட்டத்தை உடனடி யாகத் திரும்பப் பெற வேண்டும். பொது பாடத் திட்டத்தினை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களில் திணிப்பதை எதிர்த்தும், பல்கலைக்கழக தன்னாட்சி  உரிமையை பறிக்கிற பொது பாடத்திட்டத்தை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.