மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கல்லூரி மாணவர்களின் பணத்தையும்; கல்லூரி சீரமைப்புப் பணிகளுக்காக வந்த நிதியையும் கையாடல் செய்த முதல்வர் அறிவொளியை பணி நீக்கம் செய்ய வேண்டும், கல்லூரியில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் நடத்தி வரும் போராட்டம் மூன்றாவது நாளாக (புதன்) தொடர்ந்தது. மாநிலத் தலைவர் ஜி.அரவிந்தசாமி, மாவட்டத் தலைவர் மணிபாரதி, மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, ஷர்மா, நிதீஷ்குமார் மனோஜ், நவீன், சுவேதா, கபிலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.