திருச்சிராப்பள்ளி, மார்ச் 12- அரசு சட்டக் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்து தரக் கோரி, இந்திய மாணவர் சங்கம் திருச்சி அரசு சட்டக் கல்லூரி கிளைச் செயலா ளர் அபிராமி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மனு கொடுத்தார். அம்மனுவில், “திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள அரசு சட்டக் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழ கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் கல்லூ ரிக்கு வரக்கூடிய மாணவர்கள் பிற மாவட்டங் களில் இருந்து வருபவர்கள். இவர்கள் கல்லூ ரிக்கு வருவதற்கு போதிய பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அது மட்டும் இல்லாமல் மாணவர்கள் தினமும் வெகுதூரம் நடந்து வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் காஜாமலை வரை வரக்கூடிய பேருந்துகளை திருச்சி அரசு சட்டக் கல்லூரி பேருந்து நிறுத்தம் வரை வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார். மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது, மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன் ஒருங்கிணைப்பாளர்கள் சக்தி, நிலா, சதிஷ் ஆகியோர் உடனிருந்தனர்.