தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்ச் 2024 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தஞ்சா வூர் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாக ராஜன் தலைமையில், கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பங்குபெற்றனர். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கனவு கை யேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து, ஒரத்தநாடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஹனாஸ் இலியாஸ் சிறப்புரையாற்றினார். முன்னதாக, தஞ்சா வூர் முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் வரவேற்றார். தொடர்ந்து மருத்துவம், வேளாண்மை, பொறியியல், மீன்வளத்துறை, கலை மற்றும் அறிவியல் மற்றும் இதர பாடப்பிரிவுகள் குறித்து துறை வல்லுநர்கள் மூலம், உயர்கல்வி பயில்வதற்கான வழிமுறைகள், முதல் தலை முறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான வருவாய்த்துறை அலுவலர்களின் ஆலோ சனைகள், வங்கி மேலாளர்கள் வழியே கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தனிநபர் ஆலோசனைகள் வழங்கப் பட்டன. மேலும், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இந்நிகழ்ச்சியானது யூ டியூப் லிங்க் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப் பட்டது. இதில் சுமார் 5,000 மாணவ-மாணவி கள் பங்கேற்று பயன்பெற்றனர். நமது மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் குறித்து பல்வேறு கல்லூரிகளிலிருந்து அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப் பட்டன. நான் முதல்வன் திட்டக் கூறுகள் தொடர் பாக நான் முதல்வன் திட்ட மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாலாஜி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.