தஞ்சாவூர், டிச.26 - தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம், கள்ளப் பெரம்பூர் ஊராட்சியில் பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கள்ளப்பெரம்பூர் ஏரியினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், கள்ளப்பெரம்பூர் 1 ஆம் சேத்தி யில் ரூ.42.12 லட்சம் மதிப்பில் கள்ளப்பெரம் பூர் வெண்ணாறு தலைப்பு இடையே தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறு வதை பார்வையிட்டார். பின்னர், இனாத்துக்கான் ஊராட்சி இராவு சாப்பட்டியில் நடைபெற்ற “மக்க ளுடன் முதல்வர்” சிறப்பு முகா மினை ஆட்சியர் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை விப ரங்களை கேட்டறிந்தார். இராவுசாப்பட்டியில் பொது விநி யோகத் திட்ட அங்காடியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் உணவுப் பொருட்களின் இருப்பு, தரம் குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக, தஞ்சாவூர் ஒன்றியம் கள்ளப்பெரம்பூர்-2 ஆம் சேத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல் கூடத்தினை ஆய்வு செய்தார். ஆய்வின்போது தஞ்சாவூர் வட்டாட்சியர் அருள்ராஜ், ஒன்றியக் குழுத் துணைத் தலை வர் டி.அருளானந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.