பாபநாசம், ஆக.18 -
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவ மனையில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் பிரசவ வார்டு, வருகைப் பதி வேடு, பல் மருத்துவப் பகுதி, மக்களைத் தேடி மருத்துவம், மருந்து விநியோகிக்கும் இடம், ஊசி போடும் இடம், புற நோயா ளிகள் பிரிவுப் பகுதி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குமர வேல் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.